என்.டி.பி.சி. லாபம் ரூ.4,871 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.3 இறுதி டிவிடெண்ட்..

 
என்.டி.பி.சி.

என்.டி.பி.சி. நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.4,871 கோடி ஈட்டியுள்ளது. 

மின் உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்.டி.பி.சி.) தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. என்.டி.பி.சி. நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4,871 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 6 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில்  என்.டி.பி.சி. நிறுவனம் ஒட்டு  மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.5,199 கோடி ஈட்டியிருந்தது.

என்.டி.பி.சி.

2023 மார்ச் காலாண்டில் என்.டி.பி.சி. நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.44,253 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 19 சதவீதம் அதிகமாகும். 2022 மார்ச் காலாண்டில் என்.டி.பி.சி. நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.37,085 கோடி ஈட்டியிருந்தது. 2023 மார்ச் காலாண்டில் என்.டி.பி.சி. நிறுவனத்தின் செலவினம் 22 சதவீதம் அதிகரித்து ரூ.39,018 கோடியாக உயர்ந்துள்ளது.

என்.டி.பி.சி.

என்.டி.பி.சி. நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 2022-23ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.3 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்போது, என்.டி.பி.சி. நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1 சதவீதம் குறைந்து ரூ.173.25ஆக இருந்தது.