எல்.ஐ.சி. லாபம் ரூ.13,428 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.3 இறுதி டிவிடெண்ட்..

 
எல்.ஐ.சி.

எல்.ஐ.சி. நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.13,428 கோடி ஈட்டியுள்ளது. 

மத்திய அரசுக்கு சொந்தமான காப்பீட்டு மற்றும் முதலீட்டு  நிறுவனமான எல்.ஐ.சி. தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எல்.ஐ.சி. நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.13,428 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 466 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் எல்.ஐ.சி. நிறுவனம் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.2,371 கோடி ஈட்டியிருந்தது.

எல்.ஐ.சி.

2023 மார்ச் காலாண்டில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் நிகர பிரீமியம் வருவாய் ரூ.1.31 லட்சம் கோடியாக உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 8 சதவீதம் குறைவாகும். 2022 மார்ச் காலாண்டில் எல்.ஐ.சி. நிறுவனம் நிகர பிரீமியம் வருவாயாக ரூ.1.43 லட்சம் கோடி ஈட்டியிருந்தது. 2023 மார்ச் காலாண்டில் எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு முதலீடுகள் வாயிலான வருவாயாக ரூ.67,846 கோடி கிடைத்துள்ளது.

எல்.ஐ.சி.

எல்.ஐ.சி. நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.3 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, எல்.ஐ.சி. நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.69 சதவீதம் உயர்ந்து ரூ.603.60ஆக இருந்தது.