வருவாய் குறைந்தது.. கே.ஆர்.பி.எல். லாபம் ரூ.136 கோடி..
கே.ஆர்.பி.எல். நிறுவனம் 2021 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.136.22 கோடி ஈட்டியுள்ளது.
இந்தியா கேட் பிராண்டின்கீழ் அரிசி விற்பனை செய்து வரும் கே.ஆர்.பி.எல். நிறுவனம் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. கே.ஆர்.பி.எல். நிறுவனம் 2021 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.136.22 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 9 சதவீதம் குறைவாகும். 2020 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.149.81 கோடி ஈட்டியிருந்தது.
2021 செப்டம்பர் காலாண்டில் கே.ஆர்.பி.எல். நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1,059.22 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் குறைவாகும். 2020 செப்டம்பர் காலாண்டில் கே.ஆர்.பி.எல். நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.1,135.94 கோடியாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது கே.ஆர்.பி.எல். நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.91 சதவீதம் குறைந்து ரூ.261.30ஆக இருந்தது.