ஐ.டி.சி. லாபம் ரூ.5,175 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.6.75 டிவிடெண்ட்..

 
ஐ.டி.சி.

ஐ.டி.சி. நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.5,175 கோடி ஈட்டியுள்ளது.

சிகரெட்,சோப்பு மற்றும் பிஸக்ட் என பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வரும் ஐ.டி.சி. நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.5,175 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 23 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4,196 கோடி ஈட்டியிருந்தது.

ஐ.டி.சி.

2023 மார்ச் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.19,058 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 7 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனம்  செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.17,754 கோடி ஈட்டியிருந்தது.

ஐ.டி.சி. தயாரிப்புகள்

ஐ.டி.சி. நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு பங்கு ஒன்றுக்கு ரூ.6.75 இறுதி டிவிடெண்ட் மற்றும் ரூ.2.75 சிறப்பு டிவிடெண்டும் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, ஐ.டி.சி. நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.06 சதவீதம் உயர்ந்து ரூ.419.90ஆக இருந்தது.