எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லாபம் ரூ.3,983 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.18 இடைக்கால டிவிடெண்ட்
எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,983 கோடி ஈட்டியுள்ளது.
நாட்டின் மூன்றாவது ஐ.டி.சேவைகள் நிறுவனமான எச்.சி.எல். டெக்னாலஜிஸ் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,983 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 11 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,593 கோடி ஈட்டியிருந்தது.

2023 மார்ச் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.26,606 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 18 சதவீதம் அதிகமாகும். 2023 மார்ச் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.22,597 கோடி ஈட்டியிருந்தது. 2023 மார்ச் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் புதிதாக 3,674 பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது. கடந்த மார்ச் இறுதி நிலவரப்படி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 2.25 லட்சமாக உள்ளது.

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, 2023-24ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.18 இடைக்கால டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.09 சதவீதம் உயர்ந்து ரூ.1,048.90ஆக இருந்தது.


