எய்ஷர் மோட்டார்ஸ் லாபம் ரூ.905 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.37 இறுதி டிவிடெண்ட்..

 
1.49 லட்சம் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனை… லாபமாக ரூ.343 கோடி அள்ளிய எய்ஷர் மோட்டார்ஸ்…

எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.905 கோடி ஈட்டியுள்ளது. 

மோட்டார்சைக்கிள் மற்றும் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.905 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 48 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.610 கோடி ஈட்டியிருந்தது.

ராயல் என்பீல்டு விற்பனை வீழ்ச்சி… ரூ.55 கோடி நஷ்டத்தை சந்தித்த எய்ஷர் மோட்டார்ஸ்…

2023 மார்ச் காலாண்டில் எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.3,804 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 19 சதவீதம் அதிகமாகும். 2023 மார்ச் காலாண்டில் எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் 2.14 லட்சம் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 18 சதவீதம் அதிகமாகும். 

1.99 லட்சம் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் விற்பனை.. லாபமாக ரூ.533 கோடி அள்ளிய எய்ஷர் மோட்டார்ஸ்

எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கடந்த 2022-23 நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.37 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 6.56 சதவீதம் உயர்ந்து ரூ.3,630.60ஆக இருந்தது.