விப்ரோ லாபம் ரூ.3,053 கோடி... பங்கு ஒன்றுக்கு ரூ.1 டிவிடெண்ட் அறிவிப்பு

 
விப்ரோ

விப்ரோ நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,053 கோடி ஈட்டியுள்ளது. 

நாட்டின் நான்காவது பெரிய ஐ.டி. நிறுவனமான விப்ரோ தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. விப்ரோ நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,053 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 2.8 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் விப்ரோ நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,969 கோடி ஈட்டியிருந்தது.

விப்ரோ

2022 டிசம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.23,229 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 14.3 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் விப்ரோ நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.20,313.6 கோடி ஈட்டியிருந்தது. நிலையான ரூபாய் மதிப்பு அடிப்படையில் இந்த முழு நிதியாண்டில் தங்களது ஐ.டி. சேவை வர்த்தகத்தின் வருவாய் வளர்ச்சி 11.5 முதல் 12 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்ப்பதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விப்ரோ

விப்ரோ நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.1 டிவிடெண்ட் அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கட்நத வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, விப்ரோ நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.20 சதவீதம் குறைந்து ரூ.393.65ஆக இருந்தது.