டி.சி.எஸ். லாபம் ரூ.10,846 கோடி.. பங்கு ஒன்றுக்கு டிவிடெண்ட் ரூ.75 அறிவிப்பு..

 
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

டி.சி.எஸ். நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.10,846 கோடி ஈட்டியுள்ளது. 

நாட்டின் மிகப்பெரிய ஐ.டி. சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. டி.சி.எஸ். நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.10,846 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 11 சதவீதம் அதிகமாகும். 2021 டிசம்பர் காலாண்டில் டி.சி.எஸ்.  நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.9,769 கோடி ஈட்டியிருந்தது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

2022 செப்டம்பர் காலாண்டில் டி.சி.எஸ். நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.58,229 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 19 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் டி.சி.எஸ். நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.48,885 கோடி ஈட்டியிருந்தது.

டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ்

டி.சி.எஸ். நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு நிறுவன பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு மூன்றாவது இடைக்கால டிவிடெண்டாக ரூ.8ம், சிறப்பு டிவிடெண்டாக ரூ.67ம் வழங்குவதாக  அறிவித்துள்ளனர். மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, டி.சி.எஸ். நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.35 சதவீதம் உயர்ந்து ரூ.3,319.70ஆக இருந்தது.