விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை

 
விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பங்குச் சந்தைகளில் பொதுவாக திங்கள் முதல் வெள்ளி வரை பங்கு வர்த்தகம் நடைபெறும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நடைபெறாது. அதேசமயம் குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி உள்ளிட்ட முக்கிய தினங்கள் வர்த்தக தினங்களில் வந்தால் அன்று பங்குச் சந்தைகள் செயல்படாது. 

விடுமுறை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நடைபெறாது. நாளை முதல் பங்கு சந்தைகள் வழக்கம் செயல்படும். இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை என்பதால், இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும்.

வரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை; ஆய்வாளர்கள் கூறும் 5 காரணங்கள்!

இந்த மாதம்  மொஹரம், சுதந்திர தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தி என மொத்தம் 3 தினங்கள் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆக இந்த மாதம் மொத்தம் 20 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது.