மாருதி சுசுகி இந்தியா லாபம் ரூ.1,839 கோடி.. பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் அறிவிப்பு..

 
இப்படி ஆகி போச்சே! கவலையில் மாருதி சுசுகி நிறுவனம்

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில்  நிகர லாபமாக ரூ.1,838.9 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில்  நிகர லாபமாக ரூ.1,838.9 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 58 சதவீதம் அதிகமாகும். 2021 மார்ச்  காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,166.1 கோடி ஈட்டியிருந்தது.

மாருதி சுசுகி கார் மாடல்கள்

2022 மார்ச் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் நிகர வருவாயாக ரூ.25,514 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 11 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் நிகர வருவாயாக ரூ.22,958.6 கோடி ஈட்டியிருந்தது. 2022 மார்ச் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த செலவினம் 10 சதவீதம் அதிகரித்து ரூ.25,016.4 கோடியாக உயர்ந்துள்ளது.

மாருதி சுசுகி கார் மாடல்கள்

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.60 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, மாருதி சுசுகி இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.97 சதவீதம் குறைந்து ரூ.7,732.75ஆக இருந்தது.