பாடா இந்தியா லாபம் ரூ.55 கோடி.. செலவினம் 34 சதவீதம் உயர்வு..

 
பாடா இந்தியா

பாடா இந்தியா நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.54.82 கோடி ஈட்டியுள்ளது

காலணி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பாடா இந்தியா நிறுவனம் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. பாடா இந்தியா நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.54.82 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 47.44 சதவீதம் அதிகமாகும். 2021 செப்டம்பர் காலாண்டில் பாடா இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.37.18 கோடி ஈட்டியிருந்தது.

பாடா இந்தியா

2022 செப்டம்பர் காலாண்டில் பாடா இந்தியா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.829.75 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 35.11 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் பாடா இந்தியா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.614.12 கோடி ஈட்டியிருந்தது. 2022 செப்டம்பர் காலாண்டில் பாடா இந்தியா நிறுவனத்தின் மொத்த செலவினம் 33.73 சதவீதம் அதிகரித்து ரூ.769.56 கோடியாக உயர்ந்துள்ளது.

பாடா இந்தியா

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, பாடா இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.60 சதவீதம் குறைந்து ரூ.1,739.25ஆக இருந்தது.