பண்டிகை காலம் எதிரொலி.. அசோக் லேலண்ட், மாருதி சுசுகி விற்பனை அமோகம்..

 
அசோக் லேலண்ட்

பண்டிகை காலம் எதிரொலியாக கடந்த அக்டோபரில் அசோக் லேலண்ட் மற்றும் மாருதி சுசுகி இந்தியா ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை சிறப்பான வளாச்சி கண்டுள்ளது.

வர்த்தக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் கடந்த அக்டோபர் மாதத்தில்  ஏற்றுமதி உள்பட மொத்தம் 14,863 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 34 சதவீதம் அதிகமாகும். 2021 அக்டோபர் மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம் மொத்தம் 11,079 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.

மாருதி சுசுகி கார் மாடல்கள்

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022 அக்டோபர் மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் மொத்தம் 1,67,520 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 2021 அக்டோபர் மாதத்தில் மொத்தம் 1,38,335 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

பஜாஜ் ஆட்டோ

புனேவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த அக்டோபர் மொத்தம் 3,95,238 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 அக்டோபர் மாதத்தை காட்டிலும் 10 சதவீதம் குறைவாமாகும். அந்த மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 4,39,615 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.