பங்குச் சந்தைகளில் தொடரும் ஏற்றம்... சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்வு..

 
முதலீட்டாளர்களை கை விடாத பங்கு வர்த்தகம்… 5 நாளில் ரூ.3.52 லட்சம் கோடி லாபம்….

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்ந்தது.

முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது. அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்று உயர்வுடன் முடிவடைந்தது, மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், பவர் கிரிட் மற்றும் என்.டி.பி.சி. நிறுவனம் ஆகிய 3 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 27 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.

பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,966  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,527  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 137 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.  மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.282.61 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.21 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 629.07 புள்ளிகள் உயர்ந்து 62,501.69 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 178.20 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,499.35 புள்ளிகளில் முடிவுற்றது.