தொடர் ஏற்றத்துக்கு தடை... சென்செக்ஸ் 208 புள்ளிகள் வீழ்ச்சி..

 
ஏமாற்றம் கொடுத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 189 புள்ளிகள் குறைந்தது…..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 208 புள்ளிகள் குறைந்தது.

அமெரிக்க கடன் உச்சவரம்பு பேச்சுவார்த்தையில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருவது, ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தகதியில் இருந்தது போன்ற சர்வதேச நிலவரங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டாடா மோட்டார்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,677  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,796  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 129 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.  மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.279.46 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.32 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 208.01 புள்ளிகள் குறைந்து 61,773.78 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 62.60 புள்ளிகள் சரிவு கண்டு 18,285.40 புள்ளிகளில் முடிவுற்றது.