பங்குச் சந்தைகளில் தொடரும் ஏற்றம்.. சென்செக்ஸ் 18 புள்ளிகள் உயர்வு..

 
இந்த வாரம் காளைக்கு வெற்றி! சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்தது!

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் உயர்ந்தது. சென்செக்ஸ் 18 புள்ளிகள் அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. இருப்பினும் இறுதியில் பங்கு வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பின்சர்வ் மற்றும் இண்டஸ்இந்த் உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டெக் மகிந்திரா மற்றும் கோடக் மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பஜாஜ் பின்சர்வ்
மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,777  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,730  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 117 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.  மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.279.78 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.99 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 18.11 புள்ளிகள் உயர்ந்து 61,981.79 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 33.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,348.00 புள்ளிகளில் முடிவுற்றது.