பங்குச் சந்தைகளில் கரடியின் ஆதிக்கம்... 5 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 298 ள்ளிகள் வீழ்ச்சி..

 
ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.39 லட்சம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 793 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. 5 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 298 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த திங்கள் மற்றும் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. அதேசமயம் செவ்வாய் முதல் வியாழன் வரையிலான 3 தினங்களிலும் பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. நிறுவனங்களின் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை வாங்கி குவித்தது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாது என்ற நம்பிக்கை, கடந்த ஏப்ரலில் பணவீக்கம் குறைந்தது, உள்நாட்டு முதலீட்டாளர்கள் லாப நோக்கில் செயல்பட்டது உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

பணவீக்கம்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.276.59 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (மே 12) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.277.69 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்று முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 298.22 புள்ளிகள் குறைந்து 61,729.68 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 111.40 புள்ளிகள் சரிவு கண்டு 18,203.40 புள்ளிகளில் முடிவுற்றது.