தொடர்ந்து 3வது வர்த்தக தினமாக பங்குச் சந்தைகளில் சரிவு.. சென்செக்ஸ் 129 புள்ளிகள் குறைந்தது..

 
ஏமாற்றம் கொடுத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 189 புள்ளிகள் குறைந்தது…..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 129 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும், அதன் பிறகு பங்கு வர்த்தகம் படிப்படியாக வீழ்ச்சி கண்டது. இறுதியில் பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் கோடக் மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எஸ்.பி.ஐ. மற்றும் ஐ.டி.சி. உள்பட  மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

வட்டி வருவாய் அமோகம்…. லாபமாக ரூ.1,853 கோடி அள்ளிய கோடக் மகிந்திரா வங்கி..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,566  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,916  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 124 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.  மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.275.82 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ. 1.40 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 128.90 புள்ளிகள் குறைந்து 61,431.74 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 51.80 புள்ளிகள் சரிவு கண்டு 18,129.95 புள்ளிகளில் முடிவுற்றது.