பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு.. சென்செக்ஸ் 413 புள்ளிகள் வீழ்ச்சி..

 
ஏமாற்றம் கொடுத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 189 புள்ளிகள் குறைந்தது…..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 413 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகம் படிப்படியாக சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் எஸ்.பி.ஐ. உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.டி.எஃப்.சி. மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பஜாஜ் பைனான்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,844  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,682  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 135 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.  மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.278.11 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ. 56 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 413.24 புள்ளிகள் குறைந்து 61,932.47 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 112.35 புள்ளிகள் சரிவு கண்டு 18,286.50 புள்ளிகளில் முடிவுற்றது.