பங்குச் சந்கைளில் களை கட்டிய வர்த்தகம்.. சென்செக்ஸ் 318 புள்ளிகள் உயர்ந்தது..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 318 புள்ளிகள் உயர்ந்தது.

டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, ஏப்ரலில் மொத்த விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாது என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா  மோட்டார்ஸ் மற்றும் டெக்மகிந்திரா உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மாருதி சுசுகி மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டெக் மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,931  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,713  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 176 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.  மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.278.67 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ. 98 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 317.81 புள்ளிகள் உயர்ந்து 62,345.71 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 84.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,398.85 புள்ளிகளில் முடிவுற்றது.