சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தைகள்... சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்ந்தது..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்ந்தது.

கடந்த ஏப்ரல் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த எதிர்பார்ப்பு, உலக பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகள் போன்றவற்றால் பங்கு வர்த்தகம் ஏற்றம் இறக்கம் கண்டது. இருப்பினும், இறுதியில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பவர் கிரிட் மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஷாக் கொடுத்த மகிந்திரா நிறுவனம்… ரூ.3,255 கோடி நஷ்ட கணக்கு காட்டிய மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,654  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,858  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 126 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.  மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.277.69 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

முதலீட்டாளர்களை கை விடாத பங்கு வர்த்தகம்… 5 நாளில் ரூ.3.52 லட்சம் கோடி லாபம்….

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 123.38 புள்ளிகள் உயர்ந்து 62,027.90 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 17.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,314.80 புள்ளிகளில் முடிவுற்றது.