பங்குச் சந்தைகளில் பலத்த அடி.. சென்செக்ஸ் 542 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 542 புள்ளிகள் குறைந்தது.

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு நடவடிக்கை தீவிரமாக இருக்கும் என்று அதன் தலைவர்  ஜெரோம் பவல் மீண்டும் உறுதியாக தெரிவித்தது போன்றவை இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகத்த்தின் சரிவுக்கு காரணமாக அமைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல் மற்றும் எல் அண்ட் டி உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

3 மாசத்துல ரூ.4,648 கோடி நஷ்டம்…. டாடா ஸ்டீல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,568  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,920  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 127 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.264.30 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.96 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 541.81 புள்ளிகள் குறைந்து 59,806.28 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 164.80 புள்ளிகள் சரிவு கண்டு 17,589.60 புள்ளிகளில் முடிவுற்றது.