பங்குச் சந்தைகளில் களைகட்டிய வர்த்தகம்... சென்செக்ஸ் 415 புள்ளிகள் உயர்வு..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 415 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் மிகவும் நன்றாக இருந்தது, அதானி குழுமத்தில் முதலீடு போன்ற தகவல்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா மோட்டார்ஸ் மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல் மற்றும் எல் அண்ட் டி உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஆனைக்கும் கூட அடி சறுக்கும்… டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 3 மாதத்தில் ரூ.9,864 கோடி நஷ்டம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,100  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,472  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 200 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.265.46 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.06 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 415.49 புள்ளிகள் உயர்ந்து 60,224.46 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 117.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,711.45 புள்ளிகளில் முடிவுற்றது.