தொடர் சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 79 புள்ளிகள் உயர்வு..

 
 பங்கு வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 79 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. ஆனால் பின்னர் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இருப்பினும் சர்வதேச நிலவரங்களால் பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில்,நெஸ்லே இந்தியா மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல் மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஏசியன் பெயிண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,402  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,125  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 113 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.256.40 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.48 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 78.94 புள்ளிகள் உயர்ந்து 57,634.84 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 13.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,985.60 புள்ளிகளில் முடிவுற்றது.