பங்குச் சந்தைகளில் கடும் சரிவு.. சென்செக்ஸ் 774 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 774 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

மத்திய பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள், பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிப்பு தினம் நெருங்குவது, முதலீட்டாளர்கள் லாப நோக்கில் செயல்பட்டது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்ததகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் மாருதி சுசுகி உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

வட்டி வருவாய் அமோகம்.. இண்டஸ்இந்த் வங்கி லாபம் 190 சதவீதம் வளர்ச்சி..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,129 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,385 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 132 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.276.71 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.65 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 773.69 புள்ளிகள் குறைந்து 60,205.06 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 226.35 புள்ளிகள்  சரிவு கண்டு 17,891.95 புள்ளிகளில் முடிவுற்றது.