வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்பு.. சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்ந்தது..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்ந்தது. 

சில வங்கிகளின் டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன  பங்குகளில், சன் பார்மா மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம்  8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன பங்கின் விலையில் மாற்றம் இல்லை.

சன் பார்மா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,662 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,978 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 191 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.280.82 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.56 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 319.90 புள்ளிகள் உயர்ந்து 60,941.67 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 90.90 புள்ளிகள்  ஏற்றம் கண்டு 18,118.55 புள்ளிகளில் முடிவுற்றது.