பங்குச் சந்தைகளில் சரிவு கண்ட வர்த்தகம்.. சென்செக்ஸ் 365 புள்ளிகள் வீழ்ச்சி..

 
ஏற்றம் கண்டு சரிவு கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 167 புள்ளிகள் குறைந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் 365 புள்ளிகள் சரிந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்தது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பவர் கிரிட் மற்றும் எச்.சி.எல்.டெக்னாலஜிஸ் உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,006 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,468 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 140 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.251.91 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.3.26 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 364.91 புள்ளிகள் குறைந்து 54,470.67 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 109.40 புள்ளிகள் சரிந்து 16,301.85 புள்ளிகளில் முடிவுற்றது.