பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம்.. சென்செக்ஸ் 33 புள்ளிகள் உயர்ந்தது..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 33 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் வர்த்தகத்தின் பிற்பகுதியில் பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. இறுதியில் சிறிய உயர்வுடன் வர்த்தகம் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30  நிறுவன பங்குகளில், டெக் மகிந்திரா மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டெக் மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,525 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,818 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 118 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.259.69 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.9 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் ஏற்றம்
இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 33.20 புள்ளிகள் உயர்ந்து 55,702.23 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 5.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,682.65 புள்ளிகளில் முடிவுற்றது.