பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவு.. சென்செக்ஸ் 1,307 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1,307 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய ரிசர்வ் வங்கி யாரும் எதிர்பாராத வண்ணம் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) 0.40 சதவீதம் உயர்த்தியது, முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நீறுவன பங்குகளில், பவர் கிரிட், என்.டி.பி.சி. மற்றும் கோடக் மகிந்திரா வங்கி ஆகிய பங்குகளை தவிர்த்து மற்ற 27 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 826 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,548 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 101 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.259.60 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.6.26 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,306.96 புள்ளிகள் குறைந்து 55,669.03 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 391.50 புள்ளிகள் சரிவு கண்டு 16,677.60 புள்ளிகளில் முடிவுற்றது.