வாரத்தின் முதல் நாளில் சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 85 புள்ளிகள் குறைந்தது..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 85 புள்ளிகள் குறைந்தது.

அமெரிக்க பெடரல் வங்கி தனது வெளிச்சந்தை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க பங்குச் சந்தைகளில் பலத்த அடி போன்றவற்றால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டைட்டன் மற்றும் விப்ரோ உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டைட்டன்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,243 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,220 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 181 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.265.86 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.11 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.88 புள்ளிகள் குறைந்து 56,975.99 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 33.45 புள்ளிகள் சரிவு கண்டு 17,069.10 புள்ளிகளில் முடிவுற்றது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 85 புள்ளிகள் குறைந்தது.

அமெரிக்க பெடரல் வங்கி தனது வெளிச்சந்தை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க பங்குச் சந்தைகளில் பலத்த அடி போன்றவற்றால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டைட்டன் மற்றும் விப்ரோ உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,243 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,220 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 181 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.265.86 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.11 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.88 புள்ளிகள் குறைந்து 56,975.99 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 33.45 புள்ளிகள் சரிவு கண்டு 17,069.10 புள்ளிகளில் முடிவுற்றது.