பங்குச் சந்தையில் தொடர் ஏற்றத்துக்கு பிரேக்.. சென்செக்ஸ் 306 புள்ளிகள் வீழ்ச்சி..

 
ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.39 லட்சம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 793 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 6 வர்த்தக தினங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்கு வர்த்தகம் இன்று சரிவு கண்டது. சென்செக்ஸ் 306 புள்ளிகள் சரிந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிதி நிலை முடிவுகள் எதிர்பார்ப்பை காட்டிலும் குறைவாக இருந்தது, அமெரிக்க பெடரல் வங்கியின் வெளிச்சந்தை கூட்டம் குறித்த எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல் மற்றும் இண்டஸ்இந்த் வங்கி  உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மகிந்திரா அண்ட் மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,518 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,908 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 177 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.260.08 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.96 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 306.01 புள்ளிகள் குறைந்து 55,766.22 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 88.45 புள்ளிகள் சரிவு கண்டு 16,631.00 புள்ளிகளில் முடிவுற்றது.