தொடர்ந்து 6வது வர்த்தக தினமாக உயர்ந்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்வு..

 
இந்த வாரம் காளைக்கு வெற்றி! சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்தது!

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. நிறுவனங்களின் ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் எச்.டி.எப்.சி. உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இன்போசிஸ் மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

அல்ட்ராடெக் சிமெண்ட்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,782 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,541 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 146 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.261.04 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.58 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 390.28 புள்ளிகள் உயர்ந்து 56,072.23 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 114.20 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,719.45 புள்ளிகளில் முடிவுற்றது.