5 தினங்களில் ரூ.2.62 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 940 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் 940 புள்ளிகள் சரிந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரத்தின் முதல் 2 வர்த்தக தினங்களில் (திங்கள்  மற்றும் செவ்வாய்) ஆகிய தினங்களில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. ஆனால் கடந்த புதன் முதல் இன்று வரையிலான 3 வர்த்தக தினங்களிலும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. அமெரிக்க பெடரல் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

அமெரிக்க பெடரல் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.279.78  லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 30) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.282.40  லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.62 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி
 
நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 940.37 புள்ளிகள் உயர்ந்து  59,900.37 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 245.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,859.45 புள்ளிகளில் முடிவுற்றது.