தொடர்ந்து 3வது நாளாக காளையை வீழ்த்திய கரடி... சென்செக்ஸ் 453 புள்ளிகள் சரிவு..

 
ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.39 லட்சம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 793 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பங்கு வர்த்தகம் வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் 453 புள்ளிகள் குறைந்தது.

ஐ.டி. துறையை சேர்ந்த பங்குகளின் விலை குறைந்தது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி உயர்வு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்ட் மகிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா, ஐ.டி.சி. மற்றும் எல் அண்ட் டி ஆகிய 5 நிறுவன பங்குகளை தவிர்த்து இதர 25 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

வட்டி வருவாய் அமோகம்.. இண்டஸ்இந்த் வங்கி லாபம் 190 சதவீதம் வளர்ச்சி..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,430 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,075 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 133 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.279.78 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.2.17 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 452.90 புள்ளிகள் குறைந்து 59,900.37 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி132.70 புள்ளிகள் சரிவு கண்டு 17,859.45 புள்ளிகளில் முடிவுற்றது.