தொடர் ஏற்றத்துக்கு விழுந்த அடி.. சென்செக்ஸ் 621 புள்ளிகள் குறைந்தது..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 621 புள்ளிகள் சரிந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. அமெரிக்க பெடரல் வங்கி விரைவில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 7  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் டெக்மகிந்திரா உள்பட மொத்தம் 23  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,980 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,401 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 91 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.271.11 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.29 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 621.31 புள்ளிகள் குறைந்து 59,601.84 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 179.35 புள்ளிகள் சரிவு கண்டு 17,745.90 புள்ளிகளில் முடிவுற்றது.