பங்குச் சந்தைகளில் தொடரும் ஏற்றம்.. சென்செக்ஸ் 673 புள்ளிகள் உயர்ந்தது..

 
பங்கு வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 673  புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பங்குச் சந்தைகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. முதலீட்டாளர்கள் பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருவது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகளின் விலை உயர்தது போன்றவற்றால் இன்று பங்கு வர்த்தகம் உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், என்.டி.பி.சி. மற்றும் பவர் கிரிட் உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், சன்பார்மா மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 5 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

என்.டி.பி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,891 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,489 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 109 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.271.38 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.86 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. 

சென்செக்ஸ்

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 672.71 புள்ளிகள் உயர்ந்து 59,855.93 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 179.55 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,805.25 புள்ளிகளில் முடிவுற்றது.