பங்குச் சந்தைகளில் தொடரும் காளையின் ஆதிக்கம்.. 5 தினங்களில் சென்செக்ஸ் 361 புள்ளிகள் உயர்வு..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வாரமும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. கடந்த வாரம் சென்செக்ஸ் 361 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 2 தினங்களை தவிர்த்து மற்ற 3 தினங்களும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்து. அமெரிக்காவின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் பலகீனமாக இருந்தது, சர்வதேச பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்ற அச்சம், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி உயர்வு நடவடிக்கை தீவிரப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு, கச்சா எண்ணெய் விலை நிலவரம், பெரும்பாலான முக்கிய நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

கச்சா எண்ணெய்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.280.26  லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 13) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.281.17  லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.91 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம்
 
நம் நாட்டு பங்குச் சந்தைகளில், கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த கடந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 360.59 புள்ளிகள் உயர்ந்து  60,621.77 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 71.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,027.65 புள்ளிகளில் முடிவுற்றது.