சென்செக்ஸ் 12 புள்ளிகள் குறைந்தது... முதலீட்டாளர்களுக்கு ரூ.35 ஆயிரம் கோடி லாபம்

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 12 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இருப்பினும் வர்த்தகத்தின் பிற்பகுதியில் பங்கு வர்த்தகம் சிறிது வர்த்தகம் ஏற்றம் கண்டது. இறுதியில் பங்கு வர்த்தகம் சிறிய சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டி.சி.எஸ். மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஆக்சிஸ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,060 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,345 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 96 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.278.49 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.35 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 12.27 புள்ளிகள் குறைந்து 61,223.03 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 2.05 புள்ளிகள் சரிவு கண்டு 18,255.75 புள்ளிகளில் முடிவுற்றது.