சென்செக்ஸ் 85 புள்ளிகள் உயர்ந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.95 ஆயிரம் கோடி லாபம்..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 85 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும், கொரோனா வைரஸ் நிலவரம் போன்ற காரணங்களால் அதன் பின்னர் பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் பங்கு வர்த்தகம் சிறிய உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல் மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், விப்ரோ மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சன் பார்மா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,735 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,683 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 81 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.278.14 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.95 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் ஏற்றம்
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 85.26 புள்ளிகள் உயர்ந்து 61,235.30 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 45.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,257.80 புள்ளிகளில் முடிவுற்றது.