5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 66 ஆயிரம் கோடி நஷ்டம்.. சென்செக்ஸ் 812 புள்ளிகள் சரிவு..

 
ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.39 லட்சம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 793 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வார பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கமாக இருந்தது. 5 தினங்களில் சென்செக்ஸ் 812 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் கடந்த திங்கள் மற்றும் நேற்று ஆகிய 2 தினங்களை தவிர்த்து மற்ற 3 தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, ஜாக்சன் ஹோல் எக்கனாமிக் சிம்போசியம் கூட்டம், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது, பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.277.03 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 12) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ..277.69  லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.66 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 812.18  புள்ளிகள் குறைந்து 58,833.87 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 199.55 புள்ளிகள் சரிவு கண்டு 17,558.90 புள்ளிகளில் முடிவுற்றது.