சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 659 புள்ளிகள் உயர்வு..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 659 புள்ளிகள் உயர்ந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது, அமெரிக்க பங்குச் சந்தைகளில் ஏற்றம் போன்ற சர்வதேச நிலவரங்கள், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்றவை இன்று இந்திய பங்குச் சந்தைகளின் எழுச்சிக்கு வழிவகுத்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி மற்றும் டெக்மகிந்திரா உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல் மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

வாராக் கடன் குறைப்பு…. ரூ.1,112 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி …

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,066 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,397 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 126 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.282.71 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.81 லட்சம்  கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 659.31 புள்ளிகள் உயர்ந்து 59,688.22 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 174.35 புள்ளிகள் உயர்வு கண்டு 17,798.75 புள்ளிகளில் முடிவுற்றது.