தொடர்ந்து 2வது நாளாக சரிவு... சென்செக்ஸ் 337 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 337 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

அமெரிக்க பெடரல் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது, முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டைட்டன் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை உயாந்தது. அதேவேளையில், பவர்கிரிட் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட  மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. என்.டி.பி.சி. நிறுவன பங்கின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.

ஜூவல்லரி வியாபாரம் அமோகம்… டைட்டன் கம்பெனி லாபம் ரூ.419 கோடி…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,818 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,626 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 145 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.281.68 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.48 ஆயிரம்  கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 337.06 புள்ளிகள் குறைந்து 59,119.72 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 88.55  புள்ளிகள் சரிவு கண்டு 17,629.80 புள்ளிகளில் முடிவுற்றது.