தொடர் ஏற்றத்துக்கு பிரேக்... சென்செக்ஸ் 263 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 263 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீலர் மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் பவர்கிரிட் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

விளம்பர செலவினம் அதிரடி குறைப்பு…. ரூ.1,881 கோடி லாபம் பார்த்த இந்துஸ்தான் யூனிலீவர்…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,282 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,176 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 129 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.281.20 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.19 லட்சம் கோடி  கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 262.96 புள்ளிகள் குறைந்து 59,456.78 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 97.90  புள்ளிகள் சரிவு கண்டு 17,718.35 புள்ளிகளில் முடிவுற்றது.