சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்... சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. சர்வதேச நிலவரங்கள் பங்கு வர்த்தகத்துக்கு சாதகமாக இல்லாததே இதற்கு காரணம். இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மகிந்திரா அண்ட் மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,717 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,896 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 136 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.280.66 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.98 ஆயிரம் கோடி  கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 300.44 புள்ளிகள் உயர்ந்து 59,141.23 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 91.40 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,622.25 புள்ளிகளில் முடிவுற்றது.