பங்குச் சந்தைகளில் தொடரும் ஏற்றம்... மீண்டும் 60 ஆயிரத்தை கடந்த சென்செக்ஸ்

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 322 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டைட்டன் மற்றும் ஆக்சிஸ் பேங்க் உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், நெஸ்லே இந்தியா மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இதர வருவாய் பாதிப்பு.. ஆனாலும் ரூ.487 கோடி லாபம் பார்த்த நெஸ்லே இந்தியா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,192 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,392 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 175 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.285.28 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.28 லட்சம் கோடி  கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 321.99 புள்ளிகள் உயர்ந்து 60,115.13 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 103.00 புள்ளிகள் உயர்வு கண்டு 17,936.35 புள்ளிகளில் முடிவுற்றது.