தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்.... சென்செக்ஸ் 203 புள்ளிகள் உயர்ந்தது..

 
பங்கு வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 203 புள்ளிகள் உயர்ந்தது.

முன்னணி நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மாருதி சுசுகி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல் மற்றும் டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டெக் மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,531 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,908  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 128 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.276.89 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.24 ஆயிரம் கோடி நஷ்டம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 203.01 புள்ளிகள் உயர்ந்து 59,959.85 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 49.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,786.80 புள்ளிகளில் முடிவுற்றது.