பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு.. சென்செக்ஸ் 152 புள்ளிகள் வீழ்ச்சி..

 
ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.39 லட்சம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 793 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தைகளில்இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 152 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.டி.சி. மற்றும் டாக்டர் ரெட்டீஸ் உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பவர் கிரிட் மற்றும் டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

 டெக் மகிந்திரா
மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,736  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,783  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 115 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.283.90 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.86 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 151.60 புள்ளிகள் சரிவு கண்டு 61,033.55 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 45.80 புள்ளிகள் குறைந்து 18,157.00 புள்ளிகளில் முடிவுற்றது.