பங்குச் சந்தைகளில் தொடரும் ஏற்றம்.. சென்செக்ஸ் 235 புள்ளிகள் உயர்ந்தது..

 
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்த்து. சென்செக்ஸ் 235 புள்ளிகள் உயர்ந்தது.

நிறுவனங்களின் கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா  மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் பஜாஜ் பின்சர்வ் உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 

3 மாசத்துல ரூ.4,648 கோடி நஷ்டம்…. டாடா ஸ்டீல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,056  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,501  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 194 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.284.76 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.1.75 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 234.79 புள்ளிகள் ஏற்றம் கண்டு 61,185.15 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 85.65 புள்ளிகள் உயர்ந்து 18,202.80 புள்ளிகளில் முடிவுற்றது.