தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்... சென்செக்ஸ் 92 புள்ளிகள் உயர்ந்தது..

 
பங்கு வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 92 புள்ளிகள் அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் பின்னர் அமெரிக்க பெடரல் வங்கியின் நவம்பர் மாத கூட்டத்தின் மினிட்ஸ் போன்றவற்றின் காரணமாக பங்கு வர்த்தகம் நிலையில்லாமல் இருந்தது. இருப்பினும் பங்கு வர்த்தகம் இறுதியில் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பவர் கிரிட் மற்றும் டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டெக் மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,859 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,637  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 131 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.281.36 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.26 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 91.62 புள்ளிகள் உயர்ந்து 61,510.58 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 23.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,267.25 புள்ளிகளில் முடிவுற்றது.