சர்வதேச நிலவரங்களால் அடி வாங்கிய பங்கு வர்த்தகம்... சென்செக்ஸ் 519 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 519 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. அமெரிக்க பெடரல் வங்கி நிதிக்கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு, சீனாவில் கோவிட் பாதிப்புகள் அதிகரிப்பு போன்ற சர்வதேச நிலவரங்கள் பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,515  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,079  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 178 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.280.90 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.1.40 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 518.64 புள்ளிகள் குறைந்து 61,144.84 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 147.70 புள்ளிகள் சரிந்து 18,159.95 புள்ளிகளில் முடிவுற்றது.