பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் மந்தம்.. சென்செக்ஸ் 171 புள்ளிகள் வீழ்ச்சி..

 
ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.39 லட்சம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 793 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 171 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும், அக்டோபர் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் பின்னர் பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், கோடக் மகிந்திரா வங்கி மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாக்டர் ரெட்டீஸ் மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

வட்டி வருவாய் அமோகம்…. லாபமாக ரூ.1,853 கோடி அள்ளிய கோடக் மகிந்திரா வங்கி..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,720  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,897  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 152 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.284.76 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.31 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 170.89 புள்ளிகள் சரிவு கண்டு 61,624.15 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 20.55 புள்ளிகள் குறைந்து 18,329.15 புள்ளிகளில் முடிவுற்றது.